சந்திர கிரகணம்

சந்திர கிரகணம் சமயத்தில் செய்ய வேண்டிய முக்கிய குறிப்புகள்
நிலவானது பூமிக்கு பின்னால் செல்வதால் சூரியனின் கதிர்கள் நிலவின் மீது படாமல் பூமியால் மறைக்கப்படும் அந்த நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். பொதுவாகவே சந்திர கிரகணம் பௌர்ணமி அன்றே நிகழும். அந்த வகையில் இன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தின் போது எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
இந்த வருடத்தின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் இந்த “ஜூலை மாதம் 27 ஆம் தேதி இன்று இரவு 11.54 மணிக்கு தொடங்கி மறுநாள்(ஜூலை 28) அதிகாலை 3.55 மணி வரை நிகழவிருக்கிறது“.. அந்த நேரத்தில் கர்பிணி பெண்கள், வயதானோர், நோயுற்றவர்கள், குழந்தைகள் ஆகியோர் கிரகணம் ஏற்படும் சமயத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. இதன் மூலம் கிரகண கதிர்வீச்சில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும்.
கிரகணம் ஆரமிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பில் இருந்து எதையும் உண்ணக்கூடாது. வீட்டில் ஏதேனும் உணவை சமைத்து வைத்திருந்தால் அதில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். கிரகணம் முடிந்து குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே உணவருந்த வேண்டும்.
கிரகணம் ஏற்படும் சமயத்தில் கோவில்கள் அனைத்தும் மூடி இருக்கும். ஆகையால் வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யலாம், இறைவணனின் நாமத்தை ஜபித்தவாறு இருக்கலாம் அல்லது கீழே உள்ள மந்திரத்தை ஜபிக்கலாம்.
சந்திர கிரகணம் மந்திரம்
யோஸெள வஜ்ரதாரோ தேவ; ஆதித்யானாம் ப்ரபுர்தப;
ஸஹஸ்ரநயன: சந்த்ரக்ரஹ பீடாம் வ்யபோஹது
கிரகண சமயங்களில் ஹோமங்கள் செய்யலாம். இதன் மூலம் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான பலன்களை அந்த ஹோமத்தில் இருந்து நாம் பெற இயலும். உதாரணத்திற்கு ஒரு ஹோமத்தில் இருந்து நாம் 100 மடங்கு பலன்களை பெற இயலும் என்றால் அதே ஹோமத்தை சந்திர கிரகண சமயத்தில் செய்யும்போது அதில் இருந்து 1000 மடங்கு பலனை பெறலாம்.
கிரகணம் முடிந்த பிறகு தர்ப்பணம் செய்வது நல்லது. இதனை கிரகண தர்ப்பணம் என்பர். இதன் மூலம் கிரகணத்தால் ஏற்படக்கூடும் தோஷங்கள் அனைத்தும் விலகும், புண்ணியம் பெருகும். கிரகணம் துவங்குவதற்கு முன்பும் கிரகணம் முடிந்த பிறகும் குளிப்பது நல்லது.
:
ஏற்படவிருக்கும் சந்திர கிரகணத்தால் எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்
இப்போது நாம் வாழும் இந்த பூமி சூரியனை பிரதானமாக கொண்ட சூரிய குடும்பத்தின் சுற்று வட்ட பாதையில் நான்காவது கிரகமாக இருக்கிறது.அப்படியான இந்த பூமியின் மீது இந்த அண்டவெளியில் உள்ள அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தனது ஆற்றலை செலுத்தினாலும், சூரியன் மற்றும் சந்திரன் ஏற்படுத்துகின்ற தாக்கத்தை அது ஏற்படுத்தாது. பகலில் சூரியன் தரும் வெளிச்சத்தையும் ஆற்றலையும் இரவில் வளர்பிறை காலத்தில் சந்திரன் தரும் ஒளியும், குளுமையும் உணராத உயிரினங்கள் இந்த பூமியில் இல்லை.
இந்த இரு கிரகங்கங்களும் இங்கு வாழும் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. நமது ஜோதிட சாத்திரத்திலும் சூரியன் நமது மனித உடலுக்கும், சந்திரன் மனிதனின் மனதிற்கும் காரகர்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதிலும் இந்த சூரிய மற்றும் சந்திர கிரகண காலங்களில் இந்த பூமியின் மீது ஒரு வகையான சக்தியின் தாக்கம் ஏற்படுகிறது அந்த நேரங்களில் நாம் சில ஆக்கபூர்வமான மந்திர ஜெபம் தியானம் போன்றவற்றை செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும்.
இந்த சந்திர கிரகண காலங்களில் அந்த கிரகணம் ஏற்படும் நாள், கிழமை, நேரம், திதி, போன்றவைகளை காரணமாக கொண்டு 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களில் சில நட்சத்திரகாரர்களுக்கு சில கெடுதலான பாதிப்புகளை இந்த சந்திர கிரகணம் ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில் கிருத்திகை, ரோகிணி, உத்திரம், அஸ்தம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் இப்போது ஏற்படவிருக்கும் சந்திர கிரகணத்தினால் பாதிப்பை சந்திக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த 8 நட்சத்திரகாரர்களுக்கு சில பரிகாரங்களை செய்வதும், சந்திர பகவானுக்குரிய மந்திரம் அதை ஜெபிப்பதும் நல்லது.
எளிய பரிகாரம்:
சந்திர கிரகண காலத்தில் சந்திர பகவானின் ஆதிக்கம் நிறைந்த தரமான அரிசியை ஏழைகளுக்கும், துறவிகளுக்கும் தர்மம் வழங்குவது சிறப்பு.
சந்திர பகவான் துதி :
அலைகடல் அமுதங் தன்னோ டன்றுவந் துதித்து மிக்க
கலைவளர் திங்க ளாகிக் கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பாகன் செஞ்சடைப் பிறையாய் மேரு
மலைவல மாக வந்த மதியமே போற்றி போற்றி.
கிரகணம் முடிந்த உடன் குளித்து விட்டு கோயிலிற்கு சென்று வருவது நல்லது.
சந்திர கிரகணமான இன்று அனைவரும் ஜபிக்க வேண்டிய மந்திரம்
சூரிய கிரகணமோ வருடத்தில் ஒரு முறை அல்லது சில வருடங்களுக்கு ஒரு முறை என்று வரும். ஆனால் சந்திர கிரகணமோ வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு மூன்று முறை கூட வர வாய்ப்புண்டு. ஜோதிட கலையின் படி சந்திரன் மனிதர்களின் மனதை ஆளும் மனோகாரகனாவார். இந்த சந்திரனின் மீது பூமியின் நிழல் ஏற்படும் நிகழ்வு தான் “சந்திர கிரகணமாகும்” அந்த கிரகண வேளையில் கூற வேண்டிய மந்திரம் இது.
ஆம் ஐம் க்ளீம் ஸோமாயா நமஹ
இந்த மந்திரத்தை சந்திர கிரகணம் நிகழும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் நெய் தீபம் ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு, சந்திர பகவானை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும். மேலும் இரவில் சந்திர கிரகணம் நிகழும் வேளையில் ஒரு சுத்தமான துணியை கீழே விரித்து, அதில் அமர்ந்து வலது கையில் தர்பை புல் கட்டை பிடித்து கொண்டு இம்மந்திரத்தை கண்களை மூடி தியான நிலையில் வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளாகவோ ஜெபிக்க வேண்டும்.
சந்திரன் 16 நாட்கள் தேய்ந்தும் 16 நாட்கள் வளர்ந்தும் இந்த பூமிக்கு இரவில் வெளிச்சம் தருகிறார். மாதம் தோறும் வரும் அமாவாசை பௌர்ணமிக்கு எப்படி சில சிறப்புக்கள் உண்டோ அதேபோல சந்திர கிரகணத்திற்கும் சில சிறப்புக்கள் உண்டு. அதே வேலையில் சில கெடுதலான பலன்களும் கிரகணத்தால் ஏற்படும். கிரகண வேளையின் சந்திரனின் மீதும் விழும் பூமியின் நிழல் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகும். கிரகணம் நீடிக்கும் வரை அந்த நிழலானது பூமியில் வாழும் உயிர்களின் மீது ஒரு விதமான கெடுதலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே மனிதர்களாகிய நாம் இம்மந்திரத்தை கூறுவதால் கிரகணத்தின் தீய தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
கிரகண சமயத்தில் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் தீய கதிர்வீச்சு நீங்கும்
பொதுவாக நாம் வீடுகளில் விளக்கேற்றுகையில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேம்பு, இலுப்பை போன்ற எண்ணெய்கள் கொண்டு விளக்கேற்றுவது வழக்கம். ஆனால் கடலை எண்ணெய் கொண்டு யாரும் விளக்கேற்றுவது கிடையாது. நம் முன்னோர்களும் கடலை எண்ணெய் கொண்டு விளக்கேற்ற கூடாது என்றே நமக்கு கற்பித்துள்ளனர்.
கடலை எண்ணெயில் இருந்து வரும் ஒரு வித நெடியாது சில உடல் உபாதைகளை விளைவிக்கு என்பதாலேயே அதில் நாம் விளக்கேற்றுவது கிடையாது. ஆனால் கடலை எண்ணெய் கொண்டு கிரகண சமயங்களில் மட்டும் விளக்கேற்றலாம் என்று நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர்.
பொதுவாக கிரகணம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கிரகணத்தால் ஏற்படும் கதிர்வீச்சு மனிதர்களுக்கு சில தீமைகளை ஏற்படுத்தும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. இதனாலேயே கிரகணம் நடக்கும் சமயங்களில் சாப்பிட கூடாது, கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்று நம் முன்னோர்கள்
கூறியுள்ளனர்.
அது போன்ற கிரகண சமயங்களில் கடலை எண்ணெய் கொண்டு வீட்டில் தீபம் ஏற்றுவது சிறப்பு. வழக்கமான விளக்கை பயன்படுத்தாமல் இதற்காகவே ஒரு விளக்கை வைத்து கிரகணத்தன்று மட்டும் கடலை எண்ணெய் கொண்டு அதில் தீபம் ஏற்றுவதன் பயனாக அதில் இருந்து வரும் நெடியானது கிரகணத்தால் உண்டான தீய கதிர்வீச்சை அழிக்கும்.
No comments:
Post a Comment