Pages

உங்கள் ஜாதகப்படி- தொழில்

உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்
ஜாதக அடிப்படையில் ஒரு மனிதன் இந்த தொழிலுக்கு / வியாபாரத்திற்கு தான் பொருத்தமானவர் என்பதை நிர்ணயிப்பது பின்வரும் காரணிகள் தான்.
    ஜாதகத்தில் எந்த கிரகமானது வலிமை போருந்தியிருகின்றதோ அதர்க்கேற்பவே அந்த ஜாதகனுடைய தொழிலானது அமைகின்றது.

    ஒருவனின் உத்தியோகம் சம்மந்தம்பட்ட விஷயங்கள் வலிமையாக அமைய ஜாதகனின் ஜென்ம லக்னம் வலிமை வாய்ந்ததாக அமைய வேண்டும். இந்த லக்னதைப் பெற்றவர்களுக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான    விதி உள்ளது, அதனை ஆராய வேண்டும்.

    லக்னத்திற்கு பத்தாம் இடம் தான் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பத்தாம் இடம் வலிமை பெற்றதாக அமைய வேண்டும். எந்த ராசி பத்தாம் இடமாக அமைகின்றதோ அந்த ராசிக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது, அதனை ஆராய வேண்டும்.

    பத்தாம் இடதில் இருகின்ற கிரகத்தின் வலிமையையும், அதன் காரகங்களையும் முக்கியமாக தொழில் சம்மந்தப்பட்ட காரகங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

    பத்தாம் இடதின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    பத்தாம் இடதின் அதிபதி தங்கி இருக்கின்ற வீட்டின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    பத்தாம் வீட்டை யார் யார் பார்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. கால், அரை, முக்கால் மற்றும் முழு பார்வை என்று ஜாதகத்தில் உள்ளது. எந்த கிரகம் எந்த பார்வையில் பத்தாம் வீட்டைப் பார்கின்றது என்று அறிந்து அந்த கிரகத்தின் வலிமையையும், காரகதுவமங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலே சொன்ன காரணிகளை ஆராய்ந்து அணைத்து தொழில் காரகங்களையும் பட்டியலிட்டுக் கொண்ட பிறகு, ஜாதகரின் மனது எந்தெந்த தொழில்களில் ஈடுபாடு கொள்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ஜாதகர் ஏற்கெனெவே சில காலம் தொழில்/வியாபாரம் செய்திருப்பாரேயானால் அவற்றில் எவ்வேவ்வற்றில் அதிகம் சோபித்தார் என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக எந்த கிரகம் அல்லது கிரகங்கள் தொழிலுக்கு உகந்ததாக வலிமை பெற்று இருகின்றன என்று உறுதி செய்து அந்த கிரகத்தின் தொழில் காரகங்களை பரிந்துரைக்க வேண்டும்.

ஒவ்வொரு கிரகத்தின் காரகமும் கீழே விவரிக்கப் பட்டிருக்கின்றது.

சூரியனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

    அரசியலில் ஈடுபடலாம்
    அரசாங்க வேலை
    மாணிக்க வியாபாரி ஆகலாம்
    சிவப்பு வண்ண கற்களை விற்கலாம்
    தங்க ஆபரணங்களை தாயாரிக்கலாம், விற்பனை செய்யலாம்.
    தர்க்கம் செய்வதில் வல்லவராகலாம்
    மாந்த்ரீகத்தில் ஈடுபடலாம்
    நூற்பாலை சம்பந்தப் பட்ட வேலைகள் செய்யலாம்
    கட்டுமான துறைகளில் ஈடுபடலாம்
    மிளகாய் வியாபாரம்
    வெங்காய வியாபாரம்
    புகையிலை வியாபாரம்
    மர வியாபாரம்
    காகிதம் வியாபாரம்
    விபூதி வியாபாரம்
    தாவர பொருட்கள் வியாபாரம்
    கற்பூரம் வியாபாரம்
    மருந்து வியாபாரம்
    இரசாயன வியாபாரம்
    வழக்கரிஞ்சர்

சந்திரனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்க்குரியவனாக சந்திரனோ, பத்தாம் இடத்திற்கு உரியவன் உள்ள இடமானது சந்திரனின் வீட்டுக்கு உரியதாகவோ அமைந்திருந்தது என்றால் அது சந்திரனின் காரகத்துவத்தை பெற்றது என்று கூறலாம்.

சந்திரன் வெண்மையானவன். எனவே வெள்ளை நிறமுடைய பொருட்களை கொண்டு எந்த வியாபாரம் செய்தாலும் அது வெற்றியாக அமையும்.

    முத்து வியாபாரம்
    உப்பு வியாபாரம்
    சுண்ணாம்பு வியாபாரம்
    சங்கு வியாபாரம்
    மீன் பிடித்தல்
    பால், தயிர், மோர், வெண்ணை வியாபாரம்
    படகு, பரிசல்
    டிராவல் ஏஜென்சி
    வேளாண்மை
    நீர்பாசன துறை வேலைகள்
    ஈரப்பசையுள்ள பழவகை வியாபாரம்
    பெண்கள் விருப்பப்படும் எந்த தொழிலையும் செயாலாம்.
    பேன்சி ஸ்டோர்
    தங்கம், வெள்ளி மற்றும் கவரிங் கடைகள்
    சீட்டு பிடிகலாம்
    அரசாங்க துறையில் வேலை கிடைக்கும், முயன்றால் பெறலாம்
    டாக்டர் ஆகலாம்
    புகழ்பெற்ற நடிகர்கள் ஆகலாம்
    ஜோதிடம் கற்று தொழில் செய்யலாம்
    எழுத்தாளர், பாடலாசிரியர் ஆகலாம்
    எதற்கும் தகுதியற்றவராக கருதபடகூடியர் கூட சில பணக்கார வீடுகளில் அவ்வீட்டின் பெண்கள் இடக்கூடிய வேலைகளை செய்யக் கூடிய வேலைக்காரர்களாக ஆகின்றனர்.

செவ்வாயின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

செவ்வாய் காரகத்துவம் பெற்ற கிரகமாக இருக்குமேயாயின், அவர்கள் பின்வரும் தொழில் செய்ய ஏற்றவர்களாக மாறுகின்றனர்.

    ரியல் எஸ்டேட் துறை இவர்களுக்கு சிறந்தது. வீடுகள், நிலபுலன்கள் விற்பனை செய்து வருமானம் பெறலாம்.
    எங்கெங்கு நெருப்பின் துணை அவசியமோ அங்கெல்லாம் இவர்கள் உண்டு. உதாரணமாக செங்கல் சூளை, கொள்ளுப்பட்டறைகள், மின் வாரியங்கள், பயங்கர கருவிகள் தயார் செய்யும் இடங்களில் இவர்களுக்கு வேலை கிடைக்கும். அல்லது இவர்களே அவ்வேலையை செய்வார்கள்.
    இவர்களில் மிகப்ப்ரும்பாலோர்க்கு சமையல் தொழில் செய்யத் தெரியும். ஹோட்டல் துறை இவர்களுக்கு வாய்க்கும்
    குயவர்கள் ஆகலாம்
    சிற்பிகள் ஆகலாம்
    ஓவியர் ஆகலாம்
    காவல்துறை / இராணுவத்தில் பனி கிடைக்கும்
    விளையாட்டு வீரர்கள் ஆகலாம்.
    சிலம்பம், குத்துசண்டை வீரர் ஆகலாம்.
    பவள வியாபாரம்
    மாயாஜாலம், ஏவல், பில்லி, சூன்யம் எல்லாம் சர்வ சதாரணமாக அமையும்
    சர்கஸில் வேலை கிடைக்கும்
    பெரிய தோப்புகள் மூலம் லாபம் பெறலாம்
    விவசாயத்திற்கு ஏற்ற நிலத்தை குத்தகைக்கு விடுவதாலும், துவரைப்பயிரிடுவதாலும் நன்மை அடையலாம்.

புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

    புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு பத்திரிகை துறை ஏற்றது. நிருபராகவோ, துணை ஆசிரியர், ஆசிரியர் ஆகா பணி ஆற்றலாம்
    ஜோதிடத்தில் வல்லவர்களாக இருப்பார்கள்
    இன்சூரன்ஸ் துறை சிறந்தது
    இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் ஆதலால் கல்வித்துறை சம்மந்தமாக வேலை கிடைக்கும்.
    புதன் காரகதுவம் பெற்றவர்கள் புகழ் பெற்ற ஏழுத்தாளர்களாக வருவார்கள்.
    பட்டிமன்றம், கதா காலோட்சபம், சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர்கள்
    வழக்கரிஞ்சர் ஆகலாம்
    அக்ககௌடன்சி எனப்படும் கணக்குப் பதிவியல் துறை மிக சிறந்தது.
    அமைச்சர்களுக்கு ஆலோசகராகவோ, அயல் நாட்டு தூதராகவோ ஆகலாம்.
    மென்போருள் துறை மிக ஏற்றது.
    ரேடியோ, தொலைக்காட்சி துறைகளில் நல்ல வேலை கிடைக்கும்
    கடவுள் மேல் பக்தி உள்ளவர்கள் வேத சாஸ்திரங்களை கற்று அர்ச்சகர் ஆகலாம்.
    வியாபாரியாக ஆகா விரும்புவோர்கள் இலைகள் பச்சை பயிறு போன்றவற்றை கொள்முதல் செய்து விற்றால் அதிக லாபம் பெறலாம்.
    தபால் துறையில் வேலை கிடைக்கும்
    ஆசிரியர் ஆகலாம்
    கணித மேதைகளாக மாறலாம்.

குரு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

    ஆன்மீக துறையில் நாட்டம் கொண்டு அதன் வாயிலாக சிலருக்கு ஜீவனம் அமையும்.
    சிலர் மாகத்துமாவாக மாறி பிறர் மூலம் காப்பாற்றப்படுகின்றனர்.
    நகை வியாபாரமும், புஸ்பராக வியாபாரமும் ஏற்றது.
    எலுமிச்சை, ஊதுவத்தி, தென்னை, பாக்கு, கரும்பு வெல்லம் வியாபாரம் ஏற்றது
    பொதுவாக யாகங்கள், புரோகித தொழிலில் ஈடுபடுதல், கதா கலோட்சபம் செய்தல், தெய்வீக காரியங்களில் ஈடுபடுதல், மதப் பிரசாரம் செய்தல், ஆலயங்களில் மதப் பிரச்சாரம் செய்தல், ஆலயங்களில் அறங்காவல் துறையில் ஈடுபடுதல், மடங்களில் இருத்தல், தொண்டு செய்தல், ஆலய குருக்களாக இருத்தல் போன்ற முழுவதுமான ஆன்மீகத் தொழிலிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தைப் பெருகிக் கொள்ளலாம்.
    வேறு சிலர் குறிப்பட்ட இனம், மதம், பிராந்தியம் போன்றவற்றிற்க்கு தலைவராகி அதன் மூலம் வாழ்க்கை நடத்துவர்.
    இன்சுரன்சு துறை ஏற்றது
    எங்கெங்கு காசு, பணம் புழங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாக இருக்க தகுதி வாய்க்கும்.
    இவர்கள் தேர்தலில் நின்றால் சட்டமன்ற உருப்பினராகவோ, மந்திரிகளாகவோ கூட ஆகலாம்.
    இவர்களில் பலருக்கு வக்கீலாகவும், நீதிபதி ஆகவும் தகுதி உண்டு
    அரசியலில் இவர்கள் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
    பிறர்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும் பொது, அந்த விசாரணை கமிசனில் இவர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள்.
    இவர்கள் நிர்வாக துறையில் சிறப்பாக ஈடுபட முடியும்.
    மளிகை கடை வைத்தால் இலாபத்தை அடையக்கூடியவர்களாக சிலர் விளங்குவார்கள்.
    தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தகுதி சிலருக்கு வாய்க்கும்.
    தொழிலார்களின் தலைவர்களாகவும் சிலர் விளங்குவர்

சுக்ரன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

    தங்க கடை வைக்கலாம்
    வெள்ளி நகைகளை தயாரித்து விற்கலாம்
    வெண்கல வியாபராம் செய்யலாம்
    செயற்கை கற்கள் விற்பனை செய்யலாம்
    ஆடைகள் வியாபாரியாகலாம்
    மணல் லோடு ஏற்றி வந்துசப்ளை செய்யலாம்
    பால் பண்ணை அமைக்கலாம்
    லாண்டரி நடத்தலாம்
    தறி போட்டு நெய்யும் தொழிலை செய்யலாம்
    படங்களுக்கு கண்ணாடி சட்டமிட்டு தரும் கடையினை வைக்கலாம்
    முகம் பார்க்கும் கண்ணாடி கடை நடத்தலாம்.
    கோயில் வாசலில் தேங்காய், பூ, பழம் வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம்.
    தனியாக வெற்றிலைப் பாக்கு கடை வைக்கலாம்
    பூ வியாபாரம் செய்யலாம்
    சந்தன வியாபாரம் செய்யலாம்
    புளி மண்டி வைக்கலாம்
    கரும்பை விளைவித்து விற்கலாம்
    மணிலாவை பயிர் செய்து விற்பனை செய்யலாம்
    தோட்டங்கள் இட்டு இலாபம் அடையலாம்
    விறகு கடை நடத்தலாம்
    பலகார கடை நடத்தலாம்
    சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் வியாபாரம் செய்யலாம்.
    பாத்திர வியாபாரம் செய்யலாம்.
    சங்கீதம் சம்பந்தப்பட்ட மேள, தாளங்களை விற்பனை செய்யும் கடை வைக்கலாம்.
    இலவம் பஞ்சு வியாபாரம் செய்யலாம்
    கட்டில், மெத்தை வியாபாரம் செய்யலாம்
    பால், தயிர் போன்றவற்றை விற்பனை செய்யலாம்
    கால் நடை பண்ணை வைக்கலாம்
    சென்ட் வியாபாரம் செய்யலாம்
    வாகனங்களை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தலாம்
    இசை அமைக்கலாம்
    கலைஞ்சர்கள் ஆகலாம்
    பின்னணி பாடலாம்
    கவிஞர்களாக ஆகலாம்.
    பொதுவாக கலைத்துறையில் இவர்கள் பெரிதாக சாதிக்கலாம்
    கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட இவர்களுக்கு கேளிகைகளின் மூலமே வாழ்க்கையானது நடை பெரும்                                                                                                                    சனி காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.                                                                          இரும்பு, இரும்பு சம்மந்தப் பட்ட தொழில்களில் தான் இவர்கள் வல்லுனர்கள் ஆக இருப்பார்கள்.
    கடினமாக உழைக்க வல்ல இவர்களுக்கு அம்மாதிரியேதொழில் அமையும்.
    இவர்கள் நீல வண்ணமுடைய சரக்குகளை விற்பனை செய்தால் இலாபம் உண்டு
    தோல் வியாபாரம் செய்யலாம்
    எண்ணெய் வியாபாரி ஆகலாம்
    எள் பயிரிட்டு விற்பனை செய்யலாம்
    தரகர்களாக தொழில் நடத்தலாம்
    மர வியாபாரம் செய்யல்லாம்
    இரும்பு வியாபாரம் ஏற்றது
    அழுகும் பொருட்கள் வியாபாரம் செய்யலாம்
    கசாப்பு கடை நடத்தலாம்
    கால்நடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து இலாபம் பெறலாம்
    காவல் துறை ரகசியப்பிரிவில், உளவுத்துறையில் பணியாற்றலாம்
    மர வேலைசெய்யலாம்
    விவசாயம் செய்யலாம்
    கூலி வேலை செய்யலாம்
    மறு சுழற்சி தொழில்களில் ஈடுபடலாம்
    தண்டல், வரி வசூல் செய்யல்லாம்
    மருந்தாளுனராகலாம்
    அகழ்வாராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம்
    பொறியியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு உண்டு
    வெடி குண்டு தயாரிப்பு கிடங்குகளில் வேலை கிடைக்கும்

ராகு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

    இவர்கள் உளவுத் துறையில் இரகசிய கண்காணிப்பாளராக விளங்ககூடிய பதவிகளைப் பெற்றிருப்பார்கள்
    மிக சிறந்த மத போதகம் செய்து வாழ்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்
    பழைய கிழிந்து போன ஆடைகளை வாங்கி, விற்று வியாபாரம் செய்யல்லாம்
    அடகு வியாபாரம் செய்யலாம்
    மாணிக்கம், கோமேதகம் போன்ற கற்களை விற்பனை செய்யலாம்
    ஈய வியாபாரம் செய்யலாம்
    கேப்பை, உளுந்து போன்ற தானியங்களை உற்பத்திசெய்து விற்கலாம்
    ஒயின் ஷாப், கள்ளுக்கடை, சாராயக் கடை நடத்தலாம்
    மருந்து கடை நடத்தலாம்
    தரகர் ஆகலாம்
    மூங்கில், கருங்கல் வியாபாரம் செய்யலாம்
    கடலில் இருந்து எடுக்கப்படும் எப்பொருளையும் கொண்டு வியாபாரம் செய்யலாம்
    தையல்காரர் ஆகலாம்
    எருமை மாட்டின் மூலம் வியாபாரம் செய்யலாம்
    தறி நெய்து தொழில் செய்யலாம்
    கப்பல் படை, விமானப்படையில் வேலை கிடைக்கும்
    மந்திரவாதம் கற்றுக் கொள்ளலாம்

கேது காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

    ஆன்மீகத் துறையில் ஈடுபடலாம்
    அறிவியல் துறையில் ஈடுபடலாம்
    ஜோதிடத்தில் ஈடுபடலாம்
    தொழில் நுட்பங்களை பிறருக்கு செய்வதன் மூலம் பலன் பெறலாம்
    அலுமினிய பாத்திரங்கள் விற்கலாம்
    ஈயம், தகரம் வியாபாரம் செய்யலாம்
    தரகு வியாபாரம் செய்யலாம்
    கோமேதகம், மாணிக்கம் விற்பனை செய்யலாம்
    நீல நிற சரக்குகளாக வங்கி விற்கலாம்
    பட்டாசு தயாரிப்பில் ஈடுபடலாம்
    லாகிரி வஸ்துகளை கொண்டு வியாபாரம் செய்யலாம்
    ஒயின் ஷாப் நடத்தலாம்
    மீன் பிடிக்கலாம்
    தூர் வாரலாம்
    முத்துக் குளிக்கலாம்
    கசாப்புகடை வைக்கலாம்
    ரசவாதம் செய்யலாம்
    மந்திரவாத தொழில் செய்து அதன் மூலம் பொருளை சம்பாதிக்கலாம்
    இந்தக் காரகத்துவம் பெற்றவர்கள் திருட்டில் வல்லவர்களாக இருப்பார்கள்.
    கொலை செய்வதில் அஞ்சாதவர்களாக இருப்பார்கள்
    ஆண்டிப் பண்டாரமாகவும் மாற வாய்ப்பு உண்டு
    மதப் பிரசாரம் செய்வார்கள்

மேஷ லக்னத்தைப் பெற்றவர்கள்

ஒரு மனிதன் மேஷ ராசியை தனது ஜென்ம லகினமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான்.

இந்த மேஷத்திற்கு பத்தாம் இடம் மகரம். பத்னோன்றாமிடம் கும்பம். இந்த இரண்டு வீடுகளையும் தனது வீடுகளாக கொண்டு சனி திகழ்கின்றார். ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி, பதினொன்றுக்குடைய இலாபாதிபதி சனி.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    இரும்பு சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணி கிடைக்கும்
    விவசாயிகளாகவும் மாறலாம்
    நெருப்பினால் எவை எல்லாம் இயங்குகின்றதோ அந்த இடங்களில் எல்லாம் எளிதில் வேலை கிடைக்கும்.
    பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்களான தங்கம், வெள்ளி, கனிம பொருட்கள், நிலக்கரி, தாது உப்புகள் ஆகிய தொழிற்சாலைகளில் பணி கிடைக்கலாம்.
    மருத்துவ துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
    இராணுவத்திற்கு முயற்சி செய்தால் அதில் உத்தியோகம் பெறலாம்
    காவல் துறையில் வேலை கிடைக்கும்
    பொதுவாக பத்துக்கு உரியவர் சனியாக இருக்கும் பட்சத்தில் எத்தொழிலை செய்த போதிலும் அதில் கடினமான உழைப்பை செய்ய வேண்டியது வரும்.
    பத்துக்குடைய சனி சரியான இடத்தில் அமர்ந்திருந்தாரேயானால் அவர்கள் பிறரிடம் அடிமைஉத்தியோகம் செய்யாமல் தங்களாகவே சொந்த தொழிலை செய்வார்கள்.

ரிஷப லக்னத்தைப் பெற்றவர்கள்

ஒரு மனிதன் ரிஷப லக்னத்தை தனது ஜென்ம லக்னமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக சுக்ரன் திகழ்கின்றான்.

ரிஷபத்திற்கு பத்தாம் இடம் கும்பம், பதினொன்றாம் இடம் மீனம். இந்த இரண்டு வீடுகளில் கும்பத்தை தனது சொந்த வீடாக கொண்டவர் சனி. மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி. பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    உணவு விடுதி வைத்து நடத்தலாம்
    சினிமா, நாடகம் போன்ற கலை துறைகளில் ஈடுபடலாம்
    அழகு சாதன பொருகள் சம்மந்தப்பட்ட துறைகளில் ஈடுபடலாம்
    பெண்கள் விரும்பக்கூடிய ஆடைகள், ஆபரணங்கள், கற்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்

மிதுன லக்னத்தைப் பெற்றவர்கள்

மிதுன லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான்.

மிதுனத்திற்கு பத்தாம் இடம் மீனம். பதினொன்றாம் இடம் மேஷம். மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    கம்ப்யூட்டர் துறை இவர்களுக்க்கு மிகவும் ஏற்றது.
    பொறியியல் துறை ஏற்றது
    விமான துறை பிரிவுகளில் வேலை தேடலாம்
    பதிப்பகத் துறையில் நூல் வெளியீடு செய்வது நல்ல பலன் தரும்
    ரேடியோ, தொலைகாட்சி போன்ற துறைகளில் வேலை கிடைக்கும்
    செய்தி ஸ்தாபனங்களில் பணி புரியலாம்.
    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணி கிடைக்கும்
    எங்கெங்கு பணம் புலங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாகஇருக்க வாய்ப்பு கிட்டும்.
    கணக்காளராக பணி கிடைக்கும்

கடக லக்னத்தைப் பெற்றவர்கள்

கடக லக்னத்திற்கு உரியவனாக சந்திரன் திகழ்கின்றான். கடகத்திற்கு பத்தாம் இடம் மேஷம். பதினொன்றாம் இடம் ரிஷபம். மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் சுக்கிரன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    தண்ணீர் சம்மந்தப்பட்ட எந்த தொழிலும் இந்த லக்னத்திற்கு நல்லது.
    கப்பல் போக்குவரத்து துறையில் வேலை கிடைக்கும்
    மீன் பிடி தொழில் ஏற்றது.
    உப்பு வியாபாரம் ஏற்றது
    இராணுவத்தில் வேலை கிடைக்கும்
    காவல் துறையில் வேலை கிடைக்கும்
    ஜவுளி வியாபாரம் பலன் தரும்

கடக லக்னத்தைப் பெற்றவர்கள்

சிம்ம லக்னத்திற்கு உரியவனாக சூரியன் திகழ்கின்றான். சிம்மத்திற்கு பத்தாம் இடம் ரிஷபம், பதினொன்றாம் இடம் மிதுனம். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் (ஜீவனாதிபதி) சுக்கிரன். மிதுனத்தை சொந்த வீடாக கொண்டவர் (லாபாதிபதி) புதன்,

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    போலிஸ், செக்யுரிட்டி முதலான காவல் பணி கிடைக்கும்.
    வனத்துறை பணிகள் கிடைக்கும்
    கணினி துறையில் வேலை கிடைக்கும். குறிப்பாக சிஸ்டம் அட்மினிஸ்டிரேடர், நெட்வொர்க் அட்மினிஸ்டிரேடர் போன்ற பணிகள் சுலபமாக கிடைக்கும்.
    அரசாங்க துறையில் எளிதில் வேலை கிடைக்கும்
    அரசியலில் இவர்கள் ஈடுபட்டால் வெகு விரைவில் முன்னுக்கு வருவர்
    நிலத்துக்குக் அடியில் உள்ள நன்நீரை வரவழைத்தல், சுரங்கம் தோண்டுதல், அகழ்வாராய்ச்சி பணிகள் முதலானவை கிடைக்கும்

கன்னி லக்னத்தைப் பெற்றவர்கள்

கன்னி லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான். பத்துக்குடைய ஜீவானாதிபதி புதன், பதினோன்ருகுடைய லாபாதிபதி சந்திரன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    லக்னத்திற்கும், பத்திற்கும் உரியவனாக இரு வீட்டு ஆதிபத்தியம் பெற்ற புதன் முழுவதுமாக பிறரை அதிகாரப்படுத்தும் தொழிலையே பெற்றவனாகின்றான். எனவே மற்றவர்களை அதிகாரபடுத்தி வேலை வாங்கும் எத்தொழிலும் இவர்களுக்கு ஏற்றதாக அமைகின்றது.
    மேலும் நுண்மையான கலைதொடர்புடைய பணிகள் பலவற்றைச் செய்யலாம்.
    இசை பாடியோ, பயிற்றுவித்தோ வாழ்க்கை நடத்தலாம்.
    எழுத்தாளர்கள் ஆகலாம்
    நாட்டியம் ஆடுவதன் மூலம் ஜீவனம் செய்யலாம்
    கலை சம்மந்தப்பட்ட தொழில்களை செய்யலாம்
    கல்வி சம்மந்தப்பட்ட பல்வேறு பணிகளிலும் இவர்கள் ஈடுபடலாம்.

துலாம் லக்னத்தைப் பெற்றவர்கள்

துலாம் லக்னத்திற்கு உரியவனாக சுக்கிரன் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் கடகம். பதினொன்றாம் இடம் சிம்மம். பத்துக்குடைய ஜீவனாதிபதி சந்திரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சூரியன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    பெண்கள் எவை எல்லாம் விரும்புகின்றார்களோ, அத்தகைய பொருட்களை வியாபாரம் செய்யலாம்.
    பேன்சி ஸ்டோர் வைக்கலாம்.
    வீட்டுக்கு உபயோகமான அரிசி, பருப்பு, புளி விற்கும் மளிகை வியாபாரம் செய்யலாம்.
    காய்கறி, பூ வியாபாரம் செய்யலாம்
    மாட்டின் மூலம் கிடைக்க கூடிய பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவற்றை விற்பனை செய்யலாம்.
    வெள்ளை நிறமுள்ள பொருட்களை விற்பனை செய்யலாம்.

விருச்சிக லக்னத்தை பெற்றவர்கள்

விருசிக லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் சிம்மம். பதினோன்றாம் இடம் கன்னி. பத்துக்குடைய ஜீவனாதிபதி சூரியன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி புதன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    ஜோதிடம் சொல்லி இவர்கள் சம்பாதிக்கலாம்
    மந்திரவாதங்கள் செய்து, மந்திரவாதிகள் என்று புகழ் பெற்று அதன் மூலம் சம்பாதிக்கலாம்
    செப்படி வித்தை, மாயா ஜாலம், கண்கட்டு வித்தைகள் ஆகியவற்றை செய்தும் வருமானம் பண்ணலாம்.
    நீதி துறையில் இவர்களுக்கு வேலை கிடைக்கும்
    மக்களுக்கு பயன்படும் எதையாவது கண்டுபிடித்து புகழ் அடைந்து அதன் மூலம் பலன் பெறுவர்.
    ரசாயன துறைகளில் ஈடுபடுவர்.
    மருத்துவ துறையில் இவர்களில் பலர் ஈடுபடுபவர்.

தனுசு லக்னத்தை பெற்றவர்கள்

தனுசு லக்னத்திற்கு உரியவனாக குரு திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் கன்னி ஆகும். பதினோன்றாம் இடம் துலாம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி புதன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சுக்ரன்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    இவர்கள் மரத்தினாலான பொருட்களை இலாபகரமான முறையில் விற்பனை செய்யலாம்.
    ரசாயான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.மருத்துவ சம்மந்தபட்ட தொழிலில் பணியாற்றலாம்.
    கட்டடம் சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடலாம்,
    கட்டடம் சம்மந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடலாம்.

மகர லக்னத்தை பெற்றவர்கள்

மகர லக்னத்திற்கு உரியவனாக சனி திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் துலாம் ஆகும். பதினோன்றாம் இடம் விருசிகம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி சுக்ரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி செவ்வாய்.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    இவர்கள் இரசாயன சம்மந்தப் பட்ட துறைகளில் பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்கள்
    சட்டத்தால் குற்றம் என்று ஒதுக்கப்படும் பலவித பணிகளை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்
    தண்ணீர், திரவம் போன்ற பொருட்களினால் தங்கள் நடத்தலாம்.
    இவர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் இருக்க வாய்ப்பு உண்டு.

கும்ப லக்னத்தை பெற்றவர்கள்

கும்ப லக்னத்திற்கு உரியவானக சனி திகழ்கின்றான். லக்னதிற்கு பத்தாம் இடம் விருசிகம் ஆகும். பதினோன்றாம் இடம் தனுசு ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி செவ்வாய். பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவதன் மூலமாக பொருள் குவிப்பர்.
    காவல் துறையில் உத்தியோகம் கிடைகின்றது.
    இராணுவத்தில் சேர முயற்சித்தால் பலன் கிடைக்கும்.
    குத்து சண்டை முதலான பல்வேறு சண்டைகளின் மூலம் பலன் கிடைக்கும்.
    முரட்டுத் தனத்தின் மூலம் வருவாயை பெறக் கூடிய பாக்கியத்தை இவர்கள் அடைகின்றனர்.

மின லக்னத்தை பெற்றவர்கள்

மீன லக்னதிறகு உரியவனாக குரு திகழ்கின்றார், லக்னதிற்கு பத்தாம் இடம் தனுசு ஆகும். பதினோன்றாம் இடம் மகரம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி குரு. பதினோன்றுக்குடைய லாபாதிபதி சனி.

சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.

    இவர்கள் எத்தொழில் செய்தாலும், மற்றவர்கள் கௌரவமாக கருதும் தொழிலாகவே அது அமையும்.
    ஆசிரியர்களாக இருக்கலாம்
    மதபோதனையாளராக இருக்கலாம்
    பிறரை வழிகாட்டி செல்லலாம்
    ஆன்மீக துறையில் செல்லலாம்
    இவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாகவே வாழ்க்கை நடத்துவார்கள்.
    புனிதமான வேலையே கிடைக்கும்

சூரியன் நிற்கில் :- வேந்தனாய், தனாவானாய், தேவப் பிராம்மண பக்தி விசுவாசமுள்ளவனாயிருப்பார். தாய்க்கு வியாதியால் தொந்தரவு.

சந்திரன் நிற்கில் :- புத்திமான், சூரன், சுகித்து வாழ்வான். புண்ணிய காரியங்களில் சிந்தை, பந்துக்களால் சுகம், ராசமூலதனம், ப்ராப்தி, தாய்க்கு தோஷி, தீர்த்த யாத்திரை செய்வான். எடுத்த காரியம் முடிப்பார்.

செவ்வாய் நிற்கில் :- பூமியை ஆளுவான், பிரதானி, சூரன், சுகவான், பராகிரமம், சகல காரியசித்தி, சிப்பந்திகளை வைத்து ஆளுவான். அயிஸ்வரியன், வெகுஜன பூஜிதன், ஆயுத அக்கினியால் பயமுள்ளவனாம்.

புதன் நிற்ககில் :- சிற்ப வித்தை அறிவான். ஞானமறிவார், சத்திவாசகர், காவிய கணித மறிந்தவன். குசல வித்தை அறிந்தவர், வினோத வஸ்திர அலங்காரன், ஆசார சீலன், மிதமான வார்தையுரைபான்.

குரு நிற்கில் :- செல்வமுடையவன், அபிமானி, குல வித்தை, [பறிக்கும் குணம் உள்ளவன், ராஜ சேவை, பிரதாப முடையவன், சபையில் புகழ் பெற்றவர். விசேச தனத்தை சேகரிப்பான். புதிரகளிடத்தில் அற்பது வேஷம்.

சுக்ரன் நிற்கில் :- சூரன், அபிமானி, கீர்திவான், புதியுள்ளவன், நாளுக்கு நாள் விருத்தியடைவார், தனவான், பிரதாப சீலன், சுகமனுபவிபவன், சந்தான விருத்தியில்லை, நீதி, குணம், கல்வி, ஸ்திரி, மூலதன லாபமுடையவன்.

சனி நிற்கில் :- தன்வான், சூரன், பிரபு செவையுடையவன், பக்திவைராக்கிய முள்ளவன். தனம் தேடுவதில் சமர்த்தன். தாய்க்கு கண்டம். அற்பகுணம், பரஹிம்சை செய்வார்.

ராகு நிற்கில் :- நீச கர்மத்தை செய்வான். புத்திர சுகமில்லான். குரூர குணத்தால் அதிக ஆசை. அற்பசுகம். அஜாகிரதையால் தன நஷ்டம். நடன சங்கீதங்களில் ஆர்வம். சபையில் கர்வ குணமுடையவன்.

கேது நிற்கில் :- உற்சாகமுள்ளவான். ஞானப்பெருஞ்செல்வன், சௌக்கிய குறைவு, துக்கம், பிதாவுக்கு வறுமை. ரிசபம், மேஷம், கன்னி, விருசிகம் இதில் ஒன்று லக்கினத்திற்கு பத்தாம் இடம் ஆனால் சத்துரு ஜெயம்; விரோதியிஸ்தன்

No comments:

Post a Comment