Pages

குரு சந்திர யோகம்

குரு சந்திர யோகம் என்பது சுப யோகமா, அசுப யோகமா
ஜோதிடத்தில் சுப கிரகங்கள் என்று போற்றப்படுகின்ற கிரகங்களின் வரிசையில் குரு முழு சுப கிரகமும், வளர் பிறை சந்திரன் முழு சுப கிரகமாக கருதப்படுகின்றனர்
பொதுவாக குருவும், சந்திரனும் ஒரே இராசியில் சேர்ந்து இருந்தால் குரு சந்திர யோகம் என்று அனைத்து ஜோதிடர்களும் வெகுவாக புகழ்ந்து நல்ல பலன்கள் உண்டாகும் என்று கூறுகின்றார்கள். இது ஒரு கற்பனை கூற்றே ஆகும்.
பொதுவாக யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் ஆகும். சிலர் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்து கொள்கின்றனர்
ஒரு கிரகத்துடன் ஒரு கிரகம் சேர்ந்து காணப்படும்போது இந்த வார்த்தை பயன் படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு குரு கிரகத்துடன் சந்திரன் கிரகம் சேர்ந்து காணப்பட்டால் குரு சந்திர யோகம் என்று பெயர் ஏற்படுகின்றது
குரு கிரகத்துடன் செவ்வாய் கிரகம் சேர்ந்து காணப்பட்டால் குரு மங்கள யோகம் என்ற வார்த்தை பயன் படுத்தப்படுகின்றது
யோகம் என்ற வார்த்தைக்கு சேர்க்கை என்ற பொருள் ஆகும், ஒருவர் வாகனம் வாங்கினால் அவருக்கு வாகனம் வந்து சேருவதால் அவருக்கு வாகன யோகம் வந்து விட்டது என்று கூறலாம் ஒருவருக்கு திருமண நேரம் வந்து வரன் அமைந்து விட்டால் திருமண யோகம் வந்து விட்டது என்று கூறுவர்
ஆகவே யோகம் என்றால் சேர்க்கை என்ற அர்த்தமே ஆகும்.
ஒருவரது பிறந்த சாதகத்தில் குரு கிரகமும் சந்திரன் கிரகமும் சேர்ந்து காணப்பட்டால் அந்த சாதகரை சோதிடர்கள் வெகுவாக புகழ்ந்து பலன்களை உரைக்க துவங்குவார்கள்
பொதுவாக குரு தனக்காரகர் என்பதாலும், மேலும் குரு சுப கிரகம் என்பதாலும் குருவின் காரகத்தை மனதில் நிறுத்தி உங்களுக்கு பல வகையிலும் செல்வ சேர்க்கை ஏற்படும், அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும், அனைவரின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் பெற்று கல்வி, செல்வம், செல்வாக்கு பெற்று வாழ்வீர்கள், நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள், தெய்வத்தின் அருள் நிறைய உண்டு, பொறுமை குணம் படைத்து நற்பெயருடன் நீடூழி வாழ்வீர்கள் என்றும்
சந்திரன் சுப கிரகம் என்பதால் சந்திரனின் காரகத்தை மனதில் நிறுத்தி நீங்கள் அழகாக இருப்பீர்கள், பெண்களின் அன்பை பெற்று திகழ்வீர்கள், வீடு, வாகனம், கட்டிடம், பூமி, பொன், பொருள் சேர்க்கை அதிகம் உண்டு. அழகான, அறிவான மனைவி அமைவாள். தாயாரின் ஆதரவு உங்களுக்கு உண்டு . தாய் வழி சொத்துகள் கிடைக்கப்பெறுவீர்கள் வெளியூர், வெளிநாடுகள் அதிகம் சென்று வருவீர்கள் என்று புகழ்ந்துரைப்பர்
இந்த பலன்கள் உண்மையிலேயே நடை பெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை காரணம் ஏன் என்று பார்ப்போம்
ஜோதிட சாஸ்திரத்தில் குரு, கிரகமும் சந்திரன் கிரகமும் சுப கிரகங்கள் என்று கூறப்பட்டாலும் புராண சாஸ்திரப்படி குருவும், சந்திரனும் பகைவர்கள் ஆவர்
சந்திரன் வேத சாஸ்திரங்களை முறைப்படி தேவ குருவான குருவிடம் கற்றார். பின் தனக்கு ஆசிரமம் அமைப்பதற்காக தனது குருவான குரு பகவானை அழைத்திருந்தார். குரு பகவான் அன்று மற்றொரு முக்கிய வேலை நிமித்தமாக அந்த நிகழ்ச்சிக்கு செல்ல இயலாமால் தனது மனைவி தாரையை அனுப்பி வைத்தார்
சந்திரன் நடத்தும் அந்த விழாவிற்கு தனது குரு நாதர் வராவிட்டாலும் குரு நாதாரின் துணைவி தாரை வந்ததை நினைத்து மகிழ்ந்த சந்திரன் குருவின் துணைவியாரை அன்புடன் வரவேற்று உபசரித்து சிறப்புற நடத்தினார் . இந்த உபசரிப்பில் மதியிடம் மதி மயங்கிய தாரை சந்திரனின் மனைவியாகவே இருந்து விட்டார் மேலும் சந்திரனிடம் குடும்பம் நடத்தி ஒரு குழந்தையையும் பெற்று விட்டார். அந்த குழந்தையே நவ கிரகங்களில் உள்ள புதன் ஆவார்
.
குரு பகவான் சிவ பெருமானை சந்திரனிடம் தூது அனுப்பி தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வேண்டினார்
ஏற்கனவே சந்திரனுக்கு இருபத்தியேழு மனைவிகள் ( 27 நட்சத்திரங்கள் ) ஆவர் தாரையும் சேர்த்து சந்திரனுக்கு இருபத்தியெட்டு மனைவிகள் ஆனார்கள் நட்சத்திரக்கூட்டத்தில் தாரையை அபிஜித் நட்சத்திரம் என்று சேர்த்துக்கொள்ளப்பட்டது
சிவபெருமான் சந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி தாரையை மீட்டு குருவிடம் ஒப்படைத்தார். தாரையும் சந்திரன் ஏற்கனவே 27 நட்சத்திர மனைவிகளிடம் கஷ்டப்படுவதைப் பார்த்து தான் அங்கே இருக்க பிடிக்காமல் குரு பகவானிடம் சென்று விட்டார். தாரை குருவிடம் சென்று விட்டதால் அபிஜித் நட்சத்திரம் நட்சத்திர மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது
இப்படி பகை நிலை பெற்ற குருவும், சந்திரனும் சேர்ந்து கானப்பாட்டல் நற்பலன்கள் எப்படி ஏற்படும் மாற்றாக தீய பலன்களே ஏற்படுகின்றது
பொதுவாக குருவும், சந்திரனும் சேர்ந்து பிறந்த சாதகத்தில் மூன்று, ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய பாவங்களில் இருந்தால் மட்டுமே நன்மையை வழங்குகின்றனர்
மற்ற பாவகங்களில் இருந்தால் இந்த இரண்டு கிரகங்களும் அந்த பாவகங்களின் தன்மையை போட்டிப் போட்டுக் கொண்டு கெடுத்துவிடுகின்றனர்
உதாரத்திற்கு ஒருவரது பிறந்த சாதகத்தில் நான்காம் இடத்தில் குரு, சந்திரன் சேர்ந்து இருந்தால் நான்காம் இடத்தின் காரகமான வீடு, வாகனம், கட்டிடம், பூமி, மாத்ரு பாவகங்களின் தன்மைகளை கெடுத்து விடுகின்றனர்
மேலும் பிறந்த சாதகத்தில் குரு, சந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து லக்னம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், புத்திர ஸ்தானம் , களத்திர ஸ்தானம், தர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் மற்றும் இலாப ஸ்தானங்களில் இவர்கள் இருந்தால் அந்த பாவகத்தின் தன்மையை கெடுத்து தீய பலன்களையே வழங்குகின்றனர்
பிறந்த சாதகத்தில் குரு, சந்திரன் இருவரும் சேர்ந்து மூன்று, ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய ஸ்தானங்களில் மறைவு பெற்றுக் காணப்பட்டால் அந்த காரகத்தின் தன்மையை போட்டி, போட்டு கொண்டு கெடுத்து அந்த சாதகருக்கு மூன்று, ஆறு, எட்டு, பன்னிரெண்டு பாவகங்கள் தீய பலன்களை வழங்க விடாமல் தடுத்து விடுகின்றனர். இது அனுபவத்தால் கிடைத்த சான்று


2 comments:

  1. எனக்கு 4ல் குரு சந்திரன் அதுவும் தனுசில்... வாழ்க்கையின் அனைத்து யோகங்களும் சந்திர தசையிலே நடந்து. அதனால் உங்கள் கனிப்பில் தவறு உள்ளது.

    ReplyDelete
  2. எனக்கு 4ல் குரு சந்திரன் அதுவும் ரிஷபத்தில் என் ராசியும் ரிஷபம் லக்னம் கும்பம் ஐயா

    ReplyDelete