Pages

அஞ்சனம் மை

அஞ்சனம் மை
அஞ்சனம் என்றால் தமிழில் மை என்று பொருள் கருமை நிறத்துடன் வழு வழுப்பாக சற்று மெழுகு பதத்திலிருப்பதாகும்.
இந்த அஞ்சனம் பல வகைப்படும்
01)   பெண் கண்களில் அழகு சாதனமாக தீட்டப்படும் மை
02)   குழந்தைகளுக்கு கண் திருஷ்டி தோஷம் போன்றவை நீங்க தீட்டப்படும் மை
03)   தூரத்தில் இருப்பதை காண்பதற்கு கண்ணாடியில் தீட்டப்படும் மை
04)   பூமிக்கடியில் இருக்கும் புதையல் முதலானதை காண வெற்றிலையில் தீட்டப்படும் மை
05)   பெண்கள் ஆண்களை தன் வசப்படுத்த பயன்படும் மை(இதனால் ஒரு பெண் குறிபிட்ட ஆண்மகனை மட்டுமே வசப்படுத்த முடியும்)
06)   ஆண்கள் பெண்களை தன் வசப்படுத்த பயன்படும் மை(இதனால் ஒரு ஆண் குறிபிட்ட பெண்ணை மட்டுமே வசப்படுத்த முடியும்)
07)   கூட்டம் கூட்டமாக ஜனங்களை வசியப்படுத்த பயன்படும் மை
08)   லோக மக்கள் அனைவரையும் வஸப்படுத்த பயன்படும் மை
09)   அரசர்கள்,மந்திரிகள்,பணக்காரர்கள் போன்றவர்களை வசியப்படுத்த பயன்படும் மை
10)   துஷ்ட ம்ருகாதி ஜந்துகளை வசியப்படுத்த பயன்படும் மை
11)   வானுலக வாசிகள் மற்றும் தேவதைகள் போன்றவர்களை வசியப்படுத்த பயன்படும் மை
12)   அணிபவர்களை பிறர் கண்களுக்கு தெரியாமல் மறைச்செய்யும் மறைப்பு மை
13)   சித்துகள் மற்றும் ஜாலங்கள் விளையாட பயன்படும் மை
14)   ஸர்வ கார்யங்களையும் சாதித்துத் தரகூடிய மை

இப்படி பதிநான்கு வகையான அஞ்சனங்களின் பெயர்களாவது
01)   நேத்ராஞ்சனம்
02)   பாலாஞ்சனம்
03)   தூரத்ருஷ்டியாஞ்சனம்
04)   பாதாளாஞ்சனம்
05)   புருஷவசீகராஞ்சனம்
06)   ஸ்த்ரீ வசீகராஞ்சனம்
07)   ஜன வசீகராஞ்சனம்
08)   லோக வசீகராஞ்சனம்
09)   ராஜ வசீகராஞ்சனம்
10)   ம்ருக வசீகராஞ்சனம்
11)   தேவ வசீகராஞ்சனம்
12)   அந்தர்தானாஞ்சனம்
13)   ஜாலாஞ்சனம்
14)   கார்யஸித்திகராஞ்சனம்
என்று முறையே அழைப்படுகிறது
இவ்வனைத்து வகையான அஞ்சனங்கள் தயாரிக்கும் முறைகள் அதற்கு வேண்டிய மூலிகைகள்,மந்திரங்கள்,பயன்படுத்த வேண்டிய விதம்,போன்ற யாவையும் சகாதேவன் சாஸ்திரத்தில் உபதேசம் செய்துள்ளார்.10800 (பத்தாயிரத்துயென்னூறு) வகையான அஞ்சனங்களை சகாதேவன் போத்தித்துள்ளார்.
இங்கே ஒரு கார்ய சித்தி அஞ்சனத்தை பொதுமக்கள் நன்மைக்கு வேண்டி தருகிறேன் செய்து கொள்ளவும்.
க்ருஷ்ண துளசி இலை நிழலில் உலர்த்தியது,அதன் விதை,வில்வவிதை, நாயுருவி விதை,நாயுருவி வேர்,இவை அனைத்தையும் ஸமயெடையெடுத்து
பவழமல்லி என்றழைக்கப்படும் பாரிசாத மலரின் சாற்றால் மை போல் கல்லுரலில் அரைத்து அதனுடன் கஸ்தூரி,கோரோஜனம்,புனுகு,அத்தர், ஜவ்வாது போன்றதை சேர்த்து சந்தனத்தைலம் விட்டு முன்போல்மீண்டும் அரைத்து செம்பு சிமிழில் வழித்து எடுத்துக்கொண்டு சிமிழை நன்றாக மூடி அனுமார் கோவிலின் முன்பாக எவரும் அறியாத வண்ணம் புதைத்து வைத்து ஒரு மண்டலம் கழித்து எடுத்து வந்து பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.
அஞ்சனம் புதைத்த நாள் முதல் எடுத்து வரும் நாள் வரை பிரம்மசர்ய விருதம் காக்க வேண்டும் ,மது மாமிசம் போன்ற வற்றை வீட்டில் சமைத்தலோ உண்ணுதலோ கூடாது.
"அசாத்யம் சாதக ஸ்வாமின் அசாத்யம் தவ கிம் வத
ராம தூத க்ருபா சிந்தோ மத் கார்யம் சாதய ப்ரபோ"

"சாத்யம் மீறிய அரிய செயல்களை செய்யும் இறைவனே, உங்களுக்கு செய்ய முடியாததென ஏதேனும் உண்டோ?!ராமனின் தூதனே கருணை கொண்டு என் கார்யத்தை சாதிக்க அருள் புரியுங்கள் ப்ரபோ" என்பது தோராயமான அர்த்தம்.
என்ற இம்மந்திரத்தை தினமும் 108 முறை ஒரு மண்டலம் விடாமல் செபம்
செய்ய வேண்டும்.அஞ்சனத்தை பூமியிலிருந்து எடுத்து அதே கோவிலின் அனூமாருக்கு முன்பாக வைத்து அர்ச்சணைகள் செய்து ஏழைகளுக்கு உணவளித்து வீட்டிற்க்கு எடுத்து வந்து தீட்டு படாமல் பத்திரமாக வைத்துக்கொண்டு தேவையான பொழுது மோற்படி மந்திரத்தை கூறி புருவத்தில் தீட்டி நெற்றியிலும் அணிய நிறைவேறாத கடிணமான கார்யங்களும் நல்லவித்தில் முடியும் குழந்தைகளுக்கு அணிவிக்க நல்ல விதத்தில் படிப்பார்கள் இது நிச்சயம்.
 


No comments:

Post a Comment