அக்னிகார்யம் ரகசியம்
அக்னிகார்யம் யாகங்கள் - யாகங்களின் வகைகள் வேள்விகள் - ஹோமங்கள் - யாக குண்டம் யாக சாலை - யாக பொருட்கள் - யாக மந்திரம் அக்னிகார்யம் என்பது நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் படைத்தகடவுளுக்கு
நன்றி கடன் செலுத்தும் வகையில் விசேஷ பொருட்களை அதாவது மூலிகை
சமித்துக்கள், தானியங்கள், பக்ஷணங்கள்,மற்றும் வாசனைப்பொருட்களை அவருடைய
திருநாமத்தைக்கூறி அக்னியின் மூலம் கடவுளுக்கு அர்பணஞ்செய்வதே
அக்னிகார்யமாகும்.
இந்த அக்னிகார்யம் இந்து மதத்தில் மட்டுமில்லாமல்
மற்ற மதங்களிலும் உள்ளது உதாரணமாக கிருஸ்துவமத்த்தில் ரேவிலியார்
ஆகமத்தில் இறைவனுக்கு மாவு, அப்பம்,மற்றும் தங்களால் விளைவிக்கப்பட்ட
தான்யம் போன்றவற்றைக் கொண்டு தகனபலியை ஆசாரியன் மூலம் செய்ய வேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது.
இந்த அக்னிகார்யத்தை தற்சமயம் சிலபேர்கள் மட்டுமே
செய்து வருகின்றனர்! எவரெல்லாம் முறையாக இந்த அக்னிகார்யத்தை செய்து
வருவார்களோ அவர் இவ்வுலகிலும் சரி பர உலகிலும் சரி சுகமாக வாழ்வார்கள்
என்பதில் ஐயமில்லை.
அரசியல்
வாதிகளோ,அமைச்சர்களோ,வியாபாரிகளோ,சுயதொழில் செய்பவர்களோ, எவரானாலும்
அவர்களின் வசதிக்கு தக்கபடி அக்னிகார்யம், லகுவகவோ,பகுவாகவோ,மத்திமமாகவோ
செய்யவேண்டும் என்று ரகசிய சாஸ்திரங்கள் கூறுகின்றன.இவ்வாறு இவர்கள்
செயவதால் தொழில் மூலமேற்படும் பாவங்கள் அனுகாது. ஸந்ததியினர் நல்லமுறையில்
ஒங்கி வளருவார்கள்.சம்பாதித்த தனத்தால் நன்மையே உண்டாகும்.
முக்கியமாக
ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்நாளின் கடைபாகத்தில் அதிகமான
வியாதியாலும் மனதாலும் துன்பமடைவார்கள் என்றும் அக்னிகார்ய சாஸ்திரங்கள்
கூறுகின்றன. ஆனால் அவர்கள் முறையான பாபவநிவாரண மந்திரத்தால் அக்னிகார்யத்தை
ஆசாரியன் மூலம் செய்தால் அவர்கள் சுகமாக வாழ்வார்கள் என்று அதே அக்னிகார்ய
சாஸ்த்திரங்க்கள் கூறியிருக்கின்றன.
அதே போன்றே மருத்துவர்கள்
பெரிய பெரிய மருத்துவமனைகள் வைத்து நட்த்துபவர்களும் இந்த அக்னிகார்யத்தை
மாதமொருமுறை நடத்தவேண்டும் இவ்வாறு நடத்துவதால் அவர்களிடத்தில் வரும்
நோயாளிகள் நல்லமுறையில் குணமாகி அதிக நலம் பெற்று வாழ்வார்கள், ஸந்ததியினர்
நல்லமுறையில் வளருவார்கள் என்றும் அக்னிகார்ய சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மேலும்
பள்ளி மற்றும் கல்லூரிகள் நடத்துபவர்கள் கண்டிப்பாக மாதமொருமுறை
அக்னிகார்யம் செய்யவேண்டும் அப்படி செய்வதால் பள்ளியில் படிக்கும்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல்லவர்களாக வாய்ப்பார்கள் என்றும் அதிகமான
தனவரவு உண்டாகி பேரும் புகழும் அடைவார்கள். என்று அக்னிகார்ய சாஸ்திரங்கள்
கூறுகின்றன.
வழக்கறிஞர்கள்,மந்திரமாந்திரீகம் செய்பவர்கள்,
பேச்சாளர்கள், சொதிடம் கூறுபவர்வரகள்,பாடுவர்கள்,சங்கீதவித்வாங்கள், நாடக
நடிகை நடிகையர்கள்,நடனம் நர்தனம், வினேதம் காட்டுபவர்கள், போன்றவர்கள்
அக்னிகார்யத்தை முறைபடி செய்தால் அவர்கள் திறமை வெளிபட்டு தொழிலில் முதன்மை
நிலையில் இருப்பார்கள் என்று அக்னிகார்ய சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அக்னி கார்யம் செய்பவர்களுக்கும்-செய்யாதவர்களுக்கும் என்ன வித்தியாசம்
அக்னி
கார்யம் செய்யாதவர்கள் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்து
பலதுன்பத்துக்கு ஆளாகி பின்னரே புகழையும் தனத்தையும் அடைவார்கள் அதுவும்
சிலகாலத்திற்க்கு பின் அந்த புகழும் அந்த தனமும் குறைந்துவிடும்.அதோடு
மட்டுமில்லாமல். அக்னி கார்யம் செய்யாது பிறவியிலேயே திறமைபடைத்து சிலர்
புகழடைவார்கள்.ஆனால் அவர்கள் ஸந்ததியினர் அந்த பிரகாசத்தை
அடையமாட்டார்கள். அக்னி கார்யம் செய்யாதவர்களுக்கு துன்பம் ஏற்ப்பட்டால்
அதாவது வியாதி வழக்கு சிக்கல் ஏற்பட்டால் எளிதில் நீங்காது.
அக்னிகார்யம்
செய்பவர்களோ குறைந்த உழைப்பும் குறைந்த திறமையும் இருந்தாலே அவர்கள்
துடர்ந்து பேரும் புகழும் மிக எளிதில் அடைவார்கள்.ஏற்கனவே
பேர்படைத்துள்ளவர்களை வீழ்த்தி முன்னோக்கி செல்வார்கள்.இவர்களுக்கு மிக
எளிதில் துன்பம் வராது அப்படி விதியின் கொடுமையால் ஏற்பட்டாலும் அவையாவும்
பனிபோல் வடியும் என்று அக்னிகார்ய சாஸ்திரங்கள் விவரிக்கின்றன.
மேற்படி
கூறப்பட்ட எல்லாதுறையினர்களுக்கும் ஒரே மாதிரியான மந்திரமோ ஒரே மாதிரியான
அக்னிகார்யம் செய்யவேண்டிய பொருளோ கிடையாது .ஒவ்வொரு துரையினருக்கு
தனித்தனியான மந்திரங்கள் மற்றும் பொருட்களை அக்னிகார்ய சாஸ்திரங்கள்
விவரிக்கின்றன
No comments:
Post a Comment