Pages

இரஸவாதம்

 
இரஸவாதம் என்றால் என்ன?
இரஸவாதம்
இரஸவாதம் என்பது உலோகங்களை மூலிகைளாலோ, பாஷாணங்களாலோ,அல்லது மேற்படி கூறப்பட்ட இரண்டையும் கொண்டு தயாரிக்கப்பட்ட பஸ்மம், செந்தூரம், சுண்ணம், களங்கு, போன்றவற்றாலோ இரஸாயன மாற்றத்துக்கு உட்படுத்தி அதன் மூலக்கூறுகளை  நமக்கு வேண்டிய மூல கூறுள்ளவைகளாக மாற்றிக்கொள்வதே இரஸவாதமாகும்.
இதனால் என்ன? பயன். இரும்பு, ஈயம், செம்பு, துத்தநாகம், வெள்ளி போன்ற உலோகங்களை தங்கமாக மாற்றலாம்,வறுமையில்லாமல்  வாழலாம்,மேலும் உலோகங்களை மற்றொரு உலோகங்களாக மாற்றி அதை செந்தூரம் செய்து பத்தியம் காத்துஉட்கொண்டால்,புற்று நோய்,குறைநோய்(குஷ்டம்),நீரிழிவு,காசம்,இராஜமேஹம்(AIDS),போன்ற வியாதிகளை முற்றிலுமாக குணப்படுத்தலாம்,
உலோகங்களை இரஸவாதங்களுக்கு உட்படுத்தக்கூடிய மருந்துகளான களங்கு, செந்தூரம், சுண்ணம் போன்ற சக்தி வாய்ந்த இரசாயனங்களை நாம் உட்கொள்வோமாயின் அது நம் உடலையும் இரஸாயன மாற்றத்துக்குட்படுத்திதேகத்தை பொன்போல் மாற்றி நீண்ட நாட்கள் உயிருடன் நிலைக்கச்செய்யும்.
 உதாரணங்கள்:-
இரும்பை மாவுபோல் பொடிசெய்து 144 கிராம் எடுத்து நல்லொண்ணையில் ஏழுநாட்கள் ஊறவைத்து சீக்காய்பொடிபோட்டுஎண்ணைப்போக சுத்தி செய்ய வேண்டும் பிறகு எலுமிச்சம்பழரஸத்தில் ஏழுநாட்கள் ஊறவைத்து கழுவி கல்வத்திலிட்டுமுருக்குமரயிலைசாற்றால் ஏழுநாட்கள் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்,இதே போன்று நெல்லிக்காய் கெந்தகத்தை 360 கிராம்எடுத்து பசு நெய்யில் ஏழுதரம் உருக்கி சாய்த்து சுத்தி செய்து கற்றாழை சாற்றால் ஏழுநாட்கள் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்,பிறகு அரைத்து வைதுள்ள இரும்பு கெந்தக மருந்துகளை ஒன்றன் மேல் ஒன்றாக மூசையில் இட்டு வாயை மூடி சீல் செய்து,பறங்கிபூப்போல் குகைசெய்து குகையில் மூசையை வைத்து குகை பழுக்க ஊதி ஆறவிட்டு எடுத்து முசையின்லுள்ளே பார்த்தால் மாதுளம்
பூவின் நிறத்தில் செந்தூரமிருக்கும் இதை எடுத்து பத்திரமாக வைத்துக்கொண்டு தேவையான பொழுது நவ லோகத்தில்பத்துக்கொருபாகமிட்டு உருக்கினால் நவலோகமும் தங்கமாக மாறும்.ஆனால் நவலோகத்தை முறைப்படி சுத்தி செய்து குடோரியிட்டுஉருக்கும் பொழுது செந்தூரம் தூவவேண்டும்.
இந்த செந்தூரத்தை முறைப்படி வியாதிக்கு தகுந்த வகையில் தேன் மற்றும் திரிகடுகு போன்றவற்றுடன் பத்தியம் காத்து உட்கொள்ளஸர்வ நோய்களும் விலகும்.எமக்கு இதுபோல் இரஸவாதமுறைகளும் இதைவிட இன்னும் மிக எளிமையான இரஸவாதமுறைகளுமாக 8000 முறைகளை எமது குருநாதர் எனக்கு போதித்துள்ளார்.
இந்த இரஸவாதமுறைகள் யாவும் மது அருந்தாதவர்களுக்கும், புகை பிடிக்காதவர்களுக்கும், பெண்களை                                                 கற்பழிக்காதவர்களுக்கும்,
ஸாஸ்திரங்கற்ற பெரியோர்களை அவமதிக்காதவர்களுக்கும், தெய்வ நிந்தனை புறியாத்வர்களுக்கும்,மாற்றான்பொருளை அபகரிக்காதவர்களுக்கும், கொலைபாதங்கள் செய்யாதவர்களுக்கும்,கோபமற்றவர்களுக்கும் மட்டுமே சித்தியாகும்.
மேற்படி நற்குணம் கொண்டு தகுதிபெற்றவர்களுக்கு இவ்வித்தைகளை கற்று தர நான் தயாராக உள்ளேன்.


No comments:

Post a Comment