ஸ்ருஷ்டியாதி கணிதம்

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். அவர் இயற்றிய
ஸ்ருஷ்டியாதி கணிதம்
பிரம்மா ஸ்ருஷ்டி முதல் நமக்கு வேண்டிய நாள் வரை எவ்வளவு வருடங்கள் மற்றும் நாட்கள் சென்றுள்ளன என்பதை கணித்தல்
இது வரை சென்ற மனுக்கள் மொத்தம் 06 ஒரு மனுவின் காலம் 71 சதுர்யுகங்கள்.நடப்பு ஏழாவது (07) வது மனுவில் 27 சதுர்யுகங்கள் முடிவடைந்துள்ளது
06 X 71 = 426+27 = 453 (இது வரை 453 சதுர்யுகங்கள் முடிவடைந்துள்ளது)
453 X 43,20,000 (ஒரு சதுர்யுகத்தின் மனித வருடம்) = 195,69,60,000........(A)
ஒரு மனுவின் சந்திவருடம் 17,28,000
ஆறு மனுக்களுக்கு 17,28,000 X 06 = 1,03,68,000 …………..(B)
இது வரை ஒரு கல்பம் முடிவடைந்துள்ளதால் இதன் சந்தி 17,28,000......(C)
இந்த கல்பத்தில் பிரம்மா சிருஷ்டிக்க எடுத்துக்கொண்ட காலம் 1,70,64,000......(D)
195,69,60,000+01,03,68,000+17,28,000+01,70,64,000 =198,61,20,000.......(E)
கல்பகால தொடக்கமானது பூர்ண சிருஷ்டிக்கு பின்னரே என்பதால்
பிரம்ம சிருஷ்டி காலத்தை கழித்தே கொள்ள வேண்டும்.
1956960000+10368000+1728000-17064000=195,19,92,000.......(F)
28 வது சதுர்யுகத்தில் 17,28,000 க்ருதயுகம்,12,96,000 த்ரேதாயுகம்,8,64,000 துவாபர யுகம் என முன்று யுகங்கள் சென்றுள்ளதால்
195 19 92 000 + 17 28 000 + 12 96 000 + 8 64 000 =195 58 80 000 வருஷங்கள்
கல்பம் தொடங்கி நடப்பு கலியுகம் ஆரம்பம் வரை சென்ற வருடங்களாகும்.
ஒருவர் 2012 ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதிக்கு பிறக்க,அந்த நாளுக்கு சிருஷ்டியாதி வருடம் மற்றும் சுத்ததினம் காண.அன்று சித்திரை 1 ஆம் தேதியாகும் நந்தன வருடம்
கலியுகம் 3101 ஆண்டு ஆங்கிலம் ஒன்றாம் வருடமாவதால் இதை ஆங்கில வருடத்துடன் கூட்ட3101+2012=5113ஆகும் அதாவது கியுகம் தொடங்கி 5113 ஆண்டுகள் முடிவுற்றது என அறியவும்.
இதனுடன் கல்பம் தொடங்கி நடப்பு கலியுகம் ஆரம்பம் வரை சென்ற வருடங்களை கூட்ட1955880000+5113=1955885113 ஆண்டுகள் பிரம்ம சிருஷ்டி தொடங்கி இதுகால் வரை சென்ற வருடங்களாம்.
பிரம்மசிருஷ்டி முதல் சென்ற வருடங்களை 12 (பன்னிரெண்டு)ஆல் பெருக்கி தனியாக வைத்துக்கொண்டு ,பிறகு மீண்டும் முன்போல் செய்து அதை ஒருமஹாயுகத்தின் அதிக மாதங்களால் பெருக்கி ஒரு மஹாயுகத்தின் சௌரமான மாதங்களால் வகுத்து வந்த ஈவை முன் தொகையுடன் கூட்ட பிரம்மசிருஷ்டி முதல் அன்று வரை சென்ற சுத்த மாதங்களாகும்.
பிரம்மசிருஷ்டி முதல் அன்று வரை சென்ற மாதங்களை முப்பதால்(30)ஆல் பெருக்கி தனியாக வைத்துக்கொண்டு ,மீண்டும் முன்போல் செய்து ஒரு மஹாயுகத்தின் திதிக்ஷயங்களால் பெருக்கி அதை ஒருமஹாயுகத்தின் சாந்திரமான தினங்களால் வகுத்து வந்த ஈவை முன் தொகையுடன் கழித்து சித்திரை மாதம் தொடங்கி அன்று சென்ற நாட்களை கூட்ட பிரம்மசிருஷ்டி முதல் அன்று வரை சென்ற சுத்த தினங்கள் கிடைக்கும்.
(ஒரு மஹாயுகத்தின் அதிகமாதம் 1593336,ஒருமஹாயுகத்தின் சௌரமான மாதங்கள் 51840000,ஒருமஹாயுகத்தின் திதிக்ஷயங்கள் 250822522, ஒருமஹாயுகத்தின் சாந்திரமான தினங்கள் 1603000080.)
இதன் படி பார்க்க
1955880000 X 12 = 23470560000 …..(A)
23470560000 x 1593336 =37396488188160000÷51840000=721382874…(B)
A+B= 24191942874 பிரம்மசிருஷ்டி முதல் கலியுகம் தொடக்கம் வரை சென்ற சுத்த மாதங்களாகும்
24191942874 X 30 = 725758286220.....(C)
725758286220 X 250822522 =18203652226058167440
18203652226058167440 ÷ 1603000080 =113555989593…..(D)
C-D = 714402296627 பிரம்மசிருஷ்டி முதல் கலியுகம் தொடக்கம் வரை சென்ற சுத்த தினங்கள்
714402296627 ÷ 7= மீதம் 5 க்கு ஞாயிற்றுக்கிழமை தொட்டு என்ன வியாழக்கிழமை வரும்,
கலியுகம் வெள்ளிக்கிழமை தொடக்கம்
5113 X 12 = 61356 ……(A)
61356 X 1593336 ÷ 51840000= 1885 ….(B)
A+B=63241 கலியுகம் தொடங்கி அன்று வரை சென்ற சுத்த மாதங்களாகும்
63241 X 30 = 1897230……(C)
1897230 X 25082252 ÷ 1603000080 =29686……(D)
C-D=1867544 இதனுடன் சித்திரை மாதம் தொடங்கி அன்று வரை சென்ற நாட்களை கூட்ட கலியுகம் தொடங்கி அன்று வரை சென்ற சுத்த நாட்களாகும்
1867544 + 1=1867545 ÷ 7=1
கலியுகம் வெள்ளிக்கிழமை பிறந்துள்ளதால்
வெள்ளிக்கிழமை தொட்டு என்ன 1 க்கு வெள்ளிக்கிழமை வரும்.
இந்த கல்பத்தில் பிரம்மா சிருஷ்டிக்க எடுத்துக்கொண்ட காலம் 1,70,64,000......(D)
ReplyDeleteஇதை ஏன் கழிக்க வேண்டும், இல்லாத ஒன்றை என் இருப்பதுடன் சேர்த்து கணிதம் செய்ய வேண்டும்.
பிரம்மா வின் வயதை மேற்குறிப்பிட்ட கணிதம் வாயிலாக எத்தனை மனித வருடம் என்ற விளக்கம் தாருங்கள்.
இது நான் இசைந்த கேள்விக்கு பதிலாகவும் அமையும் என நம்புகிறேன்.
நன்றி
அருண்குமார்
திருச்சிற்றம்பலம்