Pages

கசின சித்தாந்தம்

                                                                                                                                                                                                                                                                 


கசின சித்தாந்தம்

 

                                                                                                                                                                                                                                                               சகாதேவன் சாஸ்திர இரகசியம்

கசினங்கள்

கசினம் என்பது நிறங்களின் மூலம் நமக்கு உண்டாகும் இடையூறுகளை போக்கிக்கொள்ளவும்,நம்தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்கும், இறைநம்பிக்கை   ஒழுக்கமுள்ள மஹான்களால் தங்கள் தவவலிமையால் கண்டறியப்பட்ட ஒரு எளியமுறையாகும்.

 A) கசினமுறை சித்தாந்தத்தில்  சிகப்பும் வெண்மை,கருப்பு, என்ற நிறங்கள் தான் ஆதி,ஞானமென்பது ஒரு தனி இருப்பு.

 B) இந்த ஞானஸஹாயத்துடன் நிறங்களின் கூட்டுறவால் குணங்கள் தோற்றம்,

 C) குணத்தால் ஆதி நிறங்களில் பச்சை,நீலம்,மஞ்சள்,என்ற புதிய நிறங்கள் தோற்றம்,

 D) ஆதி நிறத்துடன் புதிய நிறங்களின் கூட்டுறவால் பல கோடி நிறங்கள்வுற்பத்தி,

 E) பல கோடி நிறங்கள் குணத்தின் கூட்டுறவால் கோடி கணக்கான எண்ணங்கள் உற்பத்தி,

 D) ஆதி ஞானத்திற்கு எண்ணங்களுடனும் பச்சை,நீலம்,மஞ்சள்,என்ற நிறங்களில் ஏற்பட்ட கூட்டுறவால் சூக்கும பூதங்களின் தோற்றம்.

 E) சூக்கும பூதத்திற்கு பச்சை,நீலம்,மஞ்சள்  என்ற நிறங்களில் ஏற்பட்ட கூட்டுறவால் சூக்கும அணுக்களின் உற்பத்தி,

 F) சூக்கும அணுக்களில் எண்ணங்கள் குணம் ஆதி ஞானம் இவற்றின் சேர்க்கையால் சூக்கும உயிரணுக்கள்,சூக்கும ஞான கர்ம இந்திரியங்கள் தோற்றம்,

 G) சூக்கும அணுக்களில் குணங்களுடன் கூடிய கோடிகணக்கான நிறங்களின் தனி தனி பிரவேசத்தால் கோடிக்கணக்கான தன்மைக்கொண்ட பலதரப்பட்ட சூக்கும அணுக்களின் உற்பத்தி.

 H) கோடிக்கணக்கான தன்மைக்கொண்ட பலதரப்பட்ட சூக்கும அணுக்களில் சூக்கும பூதங்களுடன் கூடிய சூக்கும உயிரணுக்களின் தனித்தனி பிரவேசத்தால் சூக்கும உயிர்விதைகள் உற்பத்தி.

I) சூக்கும உயிர்விதைகளில் சிகப்பும் வெண்மை,கருப்பு, என்ற ஆதி நிறங்களின் தாக்குதலால் நான் என்ற அஹங்கார அறிவு, குழம்புதல் என்ற மனம், நிச்சயித்தல் என்ற புத்தி.வெளிப்படுதல். இப்படி சிகப்பும் வெண்மை,கருப்பு, என்ற ஆதி நிறங்களின் தாக்குதலால் மனம்,ஆஹங்காரம்,புத்தி,முளைத்த சூக்கும உயிர்விதைகளுக்கே கசினங்கள் என்று பெயர்.

இந்தகசினங்களில் ஆதி ஞானம்,ஆதிநிறம், பச்சை,நீலம்,மஞ்சள் என்ற நிறங்கள்,குணம்,பூதங்கள்,மனம்,புத்தி,ஆஹங்காரம்,கோடிகணக்கான எண்ணங்கள் போன்றவை அடங்கியுள்ளதால் பூர்ணம் என்றும்.இந்த கசினங்கள் (பூர்ணங்கள்) ஒன்று கூடி ஆலோசித்து தங்களுக்குள்ள பலத்தை சோதிக்கையில் எல்லாம் சமமாயிருப்பதை அறிந்து பலத்தைக்கூட்ட உபாயத்தை சிந்திக்க, கோடிக்கணக்கான தன்மைக்கொண்ட பலதரப்பட்ட சூக்கும அணுக்கள், கோடிகணக்கான நிறங்கள், இவற்றைக்கொண்டு, கோடிக் கணக்கான தன்மைக்கொண்ட பலதரப்பட்ட தூல அணுக்களையும்,தூல பூதங்களையும் உற்பத்தி செய்தன.

தூல பூதத்தாலும்,தூல அணுக்கள் கூட்டுறவாலும் பொருட்களும் அண்டங்களையும் உருவங்களை உற்பத்தி செய்தன ஆனால் அவை தங்களைப்போன்று எந்த இயக்கமும் அசைவும் எண்ணமும் அற்று இருப்பதை கண்டு இயக்குவதற்கு பல உபாயங்கள் செய்து முடிவில் தாங்களே அதனுள் புக எண்ணி தங்களுள் ஒருவரை நிச்சயித்து ஒரே ஒரு கசினம் ஒரே ஒரு உருவத்துள் பிரவேசித்தது,பிரவேசித்தமாத்திரத்தில் உருவம் இயங்க ஆரம்பித்தது.

ஆனால் கசினங்களாக இருந்தபொழுது அவைகள் தங்களிடமுள்ள ஆதி ஞாதின் உதவிகொண்டு சூக்கும ஞான கர்ம இந்திரியங்கள் மூலம் பார்த்தல்,கேட்டல்,தொடுதல்,போன்றவை அமைந்திருக்க, பிரவேசித்த மாத்திரத்தில் அவையாவும் முடியாமல் இருக்க மேலும் வெளியிலுள்ள கசினங்களுடன் தொடர்பு கொள்ளமுடியாலும் அந்த உருவத்திலிருந்தும், வெளிவரமுடியாதும் போயின.இதையடுத்து பலகோடிகணக்கான கசினங்கள் பலகோடிகணக்கான உருத்தினுள்,தனித்தனியாக புக அவைகளும்முன்போலவே ஆயின முடிவில் ஒரே கசினம் மட்டும் இப்பொழுது எஞ்சியிருக்க அது மற்ற கசினங்களை மீட்கவும் அதனுடன் தொடர்புக்கொள்ளவும் பல உபாயங்களை செய்தது

அப்பொழுது அது எல்லா உருவத்தினுள்ளும் உயிரோட்டம் இல்லாமல் அசைவுமட்டும் இருப்பதை அறிந்து தனக்குள் இருக்கும் எல்லா பொருட்களையும் பல காலம் ஆராயாச்சி செய்ய உயிரியக்கமான சூக்கும உயிரணு மூலமே ஆதிஞானமானது,ஞான கர்ம இந்திரியங்கள் மூலம் பார்த்தல்,கேட்டல்,தொடுதல்,போன்றவை அமைந்திருப்பதை உணர்ந்து முன்பு கசினங்கள் புகுந்த தூல பூதத்தாலும்,தூல அணுக்களாலும் ஆன உருவங்களுக்கு உயிரோட்ட வடிவான சூக்கும உயிரணுக்களை அது செலுத்தஅவைகளால் இப்பொழுது தன்னுடன் தொடர்பு கொள்ள முடிகிறதா என்று எண்ணி அந்த உருவங்களை தொட அந்த உருவங்கள் தன்னை தொடுவது யார் என சிந்திக்க தோல் உண்டாயின, பின் மீண்டும் ஓளி எழுப்ப அதை பார்க்க சில உருவங்களுக்கு கண்களும்,ஒலி எழுப்ப அதை கேட்க்க வேண்டும்என சிந்திக்க காதுகளும்,இவ்வாறு,எல்லா இந்திரியங்களும்,உருவாகியது, ஆனால் எல்லா உருவங்களுக்கும் எல்லா இந்தியங்களும் உருவாகாமலும் சிலவற்றுக்கு சிலவைமட்டும் முளைத்திருப்பதையும் அந்த இந்திரியங்கள் கூட வேறு வேறு உருவம்,அமைப்பு,தன்மை,போன்ற வேறுபட்டிருப்பதையும்,கண்டு அதற்கு காரணம் என்னவென்று சிந்திக்க அதற்கு அந்த தூல அணுக்கள் உருவாக காரணமான நிறங்களின் தன்மையே என உணர்ந்த்து.

இதனாலோ எஞ்சியிருந்த அந்த ஒரு கசினம் தன் ஆராய்ச்சிமூலம் யாவையும் உணர்ந்திருந்த காரணத்தால் அதற்கு ஞானகசினம் என்று பெயர்பெறலாயிற்று.தூல பூதங்கள் நிறங்கள் போன்றவற்றின் வேறுபாட்டிகாரணத்தால் எந்த உருவங்களில் எல்லா கசினங்கள்  எல்லா கசிநத்தன்மை அமையபெற்றதாய் இருக்கின்றதோ அதுவே மனித உருவமாயிற்று.

கசின சித்தாந்தம் மிகவும் நவீன விக்ஞானத்திர்கு பொருந்தி வரும். உணவு உடை மொழி மைதுனம் சாதி மதம் அண்டங்கள் போன்றவைகள் தோன்றிய விதம் தியானமுறைகள் போன்றைவைகள் பற்றி வெகு விறிவாக உள்ளது அதை நான் இங்கே சுருக்கி கூறியுள்ளேன்.என்ன என்ன செயலுக்கு என்ன என்ன நிறத்தை எப்படி தியானித்து எப்படி செலுத்த வெண்டும் என்று சகாதேவன் எமக்கு கற்று தந்துள்ளார் அறிய வேண்டுபவர்கள் அறிய எம்மை தொடர்புகொள்ளவும்.

உதாரணமாக வெள்ளியில் மஞ்சள் நிறத்தை தியானித்து செலுத்தி தங்கம் பெறலாம். மஞ்சள் காமாலைக்கு வெள்ளை நிறத்தை தியானித்து பாதிக்கப்பட்டவனின் உதிரத்தில் கண்கள் மூலம் செலுத்தி  நிவர்த்தி பெறலாம்.

யார் யாருக்கு எந்த எந்த நிறம் ஆதி என்பதை முதலில் அறிந்து அந்த நிறத்தை அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,ஒருவர் பணம்,பேர், புகழ், போன்றவற்றுடன் வாழ்வதற்கு பிறந்த காலம் தொட்டேஅவர் தேகத்தை ஆட்சி செலுத்தும் நிறமே காரணமாகும்.

எந்த நிறம் ஒருவரை பிறந்த நாள் முதற்க்கொண்டு ஆட்சி செலுத்துகிறது என்பதை அறிய.பிறந்த தேதி கொண்டு நிறகணிதம் செய்ய வேண்டும்

நிறங்கள் ஒவ்வொன்றுக்கும் நிறமத்திமம் கணிக்க வேண்டும்,நிற மத்திமத்தை

அண்ட சலனத்தில் கழித்து நிறமுலங்களால் வகுத்து அணுமூலத்தால் பொருக்க வேண்டும் இப்படி கிடைத்த தொகையை ருணம் மற்றும் தனம் அறிந்து ஜா பலத்தால் சம்ஸ்காரம் செய்து சுத்திக்க ஒருவர் தங்கள் நிறத்தை இன்னதென்று அறியலாம்.

ஒருவர் தங்கள் நிறங்களை அறிந்து கொண்டால் அறிவாற்றலை மிக ஆச்சர்ய தக்க வகையில் வளர்த்துக்கொள்ளலாம்,தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஏறப்டும் தடங்கள்களை மிக எளிதில் போக்கிக்கொள்ள முடியும்

ஆகவே மனிதர்கள் தங்களுக்கு எந்த குறை ஏற்பட்டாலும் அந்த உடல் உண்டாக காரணமான பூதங்களின் நிறங்கள் அதன் காரணமான தூல அணுவின் நிறத்தையும் உணர்ந்து அந்த நிறத்தை தியனித்தால் குறை நீங்கப்பெறலாம் என்பது கசின சித்தாந்தம்.

உலகில்   வேறுயாருக்கும் இம்மியளவும் இக்கசின சித்தாந்தம் தெரியவே தெரியாது என்பது நிதர்சனமான உண்மை

No comments:

Post a Comment